×

திருப்பரங்குன்றம் அருகே ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

திருப்பரங்குன்றம், டிச.27: திருப்பரங்குன்றம் அருகில் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சந்திராபாளையம் பகுதியில் தர்மசாஸ்தா பரிபாலன சபையின் சார்பில் இப்பகுதியில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் 50வது ஆண்டு மண்டல பூஜை மற்றும் 28வது ஆண்டு பூக்குழி பூஜை விழா நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின் அன்னதானம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், மணிகண்டன், சுப்புராம், ஜெமினி, வீரபத்திரன், சக்திவேல், தஙகம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : devotees ,Thiruparankundram ,flower pond ,Iyappa ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...