×

இன்று உள்ளாட்சி தேர்தலையொட்டி ஏழு ஒன்றியங்களில் பொது விடுமுறை அறிவிப்பு

திண்டுக்கல், டிச. 27: உள்ளாட்சி தேர்தலையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஏழு ஒன்றியங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். தமிழ்நாடு மாநில அரசாணை நிலை எண் 184 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நாள் 24.12.2019ன் படி, சாதாரண ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களில் டிச. 27 மற்றும் டிச. 30ம் ஆகிய தேதிகளில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள ஆத்தூர், வத்தலக்குண்டு, திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம், சாணார்பட்டி ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அதேபோல் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள குஜிலியம்பாறை, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழநி, தொப்பம்பட்டி, வடமதுரை, வேடசந்தூர் ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் உட்பட்ட பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு டிச. 30ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : Public Holidays ,Universities ,
× RELATED CUET முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை..!!