குஜிலியம்பாறை, டிச. 27: குஜிலியம்பாறை அருகே கோட்டாநத்தம் கிராமம் கம்புளியம்பட்டி அனுமந்தபுரத்தில் அபயவரத ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. 12ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை அபயவர சுவாமிக்கு மூல மந்திர ஹோமம், சகஸ்ர நாம வாயு புத்திர ஹோம பூஜைகளும், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து பால்குடம் எடுத்தல், குத்துவிளக்கு பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமமக்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகஸ்தர் சுப்பிரமணியன் செய்திருந்தார்.