×

ஓமலூர், காடையாம்பட்டியில் அனைத்து வாக்குச்சாவடிகளும் தயார்

ஓமலூர், டிச.27: ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுக்காவில் 3 ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட் சித் தேர்தல் வாக்குப்பதிவுக்காக 552 வாக்குச்சாவடிகள் தயாராக உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் தாரமங்கலம் ஆகிய 3 ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் முழு அளவில் தயாராக உள்ளன. ஓமலூர் ஒன்றியத்தில் 271 வாக்குச்சாவடிகளும், காடையாம்பட்டி ஒன்றியத்தில் 149 வாக்குச்சாவடிகளும், தாரமங்கலம் ஒன்றியத்தில் 132 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கான அலுவலர்களும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அந்தந்த மையங்களுக்கு சென்று வாக்குச்சாவடி மையங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும், வாக்குச்சாவடி மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், மண்டல தேர்தல் அலுவலர் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 4 பதவிகளுக்கு 4 வண்ண ஓட்டுப்பதிவு சீட்டுக்கள், ஓட்டுப்பெட்டிகள், மை உள்ளிட்ட 72 பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 552 வாக்குச்சாவடிகளும் வாக்குப்பதிவுக்கு முழு அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒன்றிய அளவில் நியமிக்கப்பட்டுள்ள உள்ளூர் தேர்தல் பார்வையாளர்கள் அந்தந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு, ஓட்டுப்பதிவு பொருட்கள், குறிப்பிட்ட நேரத்தில் முழுமையாக வந்து சேர்ந்துவிட்டதா என உறுதி செய்து வருகின்றனர்.

மேலும், ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா, வாக்குச்சாவடிக்கு முகவர் வருகை, ஓட்டுப்பெட்டிகளை முகவர்களிடம் உறுதி செய்தல், ஓட்டுப்பதிவு விபரங்களை, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தவறாமல் சேகரித்து, தலைமையிடத்துக்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித் தேர்தல் அலுவலர் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து பணிபுரியவும் மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

Tags : polling booths ,Kadayampatti ,
× RELATED மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குசாவடிகளில் நாளை மறுவாக்குபதிவு