×

குமாரபாளையத்தில் 4 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

குமாரபாளையம், டிச.27: குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டு முதல் 7வது வார்டு  பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடப்பதால், இன்று (27ம்தேதி)  துவங்கி 4 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
 குமாரபாளையம்  நகராட்சிக்குட்பட்ட நடராஜா நகரில் இருந்து, ஓலப்பாளையம் சாலை வரையிலும், புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள  குடிநீர் குழாய்கள் சேதமாகியுள்ளது. இதையடுத்து நகராட்சியில் புதிய  குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டு முதல் 10வது வார்டு வரையிலான 7 வார்டுகளுக்கு இன்று (27ம்தேதி) முதல் 30ம் தேதி வரை குடிநீர் வினியோகம்  இருக்காது என குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு  தெரிவித்துள்ளார்.

Tags : water stop ,Kumarapalai ,
× RELATED உடனடியாக தண்ணீர் நிறுத்தம் சீர்காழி...