×

சிறுவன் அடித்து கொலை: குளத்தில் சடலம் வீச்சு; 2 பேர் கைது

புழல்: சோழவரம் அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி(54). இவரது மகள் வழி பேரன் தனசேகர் (எ) சூர்யா(14), கவரப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். இதற்கிடையில், கடந்த 11ம் தேதி நத்தம் கிராமத்தில் உள்ள திருவாலீஸ்வரர் கோயில் குளத்தில் சிறுவன் சடலம் மிதப்பதாக சோழவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குளத்தில் சடலமாக மிதந்தது தனசேகர் என தெரியவந்தது. மேலும், கடந்த 9ம் தேதி நெடுவரம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாமலை(17), கோபாலகிருஷ்ணன்(21) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து தனசேகரனை வௌியில் அழைத்து சென்றனர். வெகுநேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை. அண்ணாமலை, கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் தனசேகரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று, அடித்து, உதைத்து குளத்தில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. புகாரின்பேரில் போலீசார், இருவரையும் கைது செய்தனர். மேலும், முன்விரோத தகராறு காரணமாக சிறுவனை கொலை செய்தார்களா அல்லது வேறு எதாவது காரணமா என அவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். …

The post சிறுவன் அடித்து கொலை: குளத்தில் சடலம் வீச்சு; 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Govindasamy ,Natham village ,Cholavaram ,Path Baran Dhanasekhar ,A) Surya ,Kawarpettai ,Dinakaran ,
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு 3 டிஎம்சியாக அதிகரிப்பு