கிருஷ்ணகிரி, டிச.27: காவேரிப்பட்டணம் அடுத்த சாப்பர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (45) விவசாயி. இவர் தனது நிலத்தில் கோழி பண்ணை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை கோழிப்பண்ணைக்கு சென்ற அவர், டேங்கிற்கு தண்ணீர் ஏற்ற, மின்மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட ஜெயபிரகாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஜெயபிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் எஸ்.ஐ கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.