×

காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டில் நேரம் காப்பாளர் அறையை திறக்க மக்கள் கோரிக்கை

காரிமங்கலம், டிச.27: காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்துக்கழக நேரம் காப்பாளர் அறையை திறக்க ேவண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரிமங்கலம் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரூர், பாலக்கோடு, சேலம் ஆகிய ஊர்களுக்கு சென்று வருகிறது. அனைத்து அரசு பேருந்துகளும், காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்வதற்கு, அரசு பர்மிட் வழங்கியுள்ளது. காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டில் ேபருந்துகள் வந்து செல்வதை கண்காணிக்கும் பொருட்டு, 10 ஆண்டுகளுக்கு முன்பு நேரம் காப்பாளர் அறை திறக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நேரம் காப்பாளர் அறை திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. நேரம் காப்பாளர் அறை செயல்படாததால், பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வந்து செல்வதை கண்காணிக்க முடியவில்லை. பல்வேறு பேருந்துகள், பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் தங்களது இஷ்டப்படி சென்று வருகிறது. எனவே, நேரம் காப்பாளர் அறையை முறையாக திறந்து, பேருந்துகளை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : saver room ,bus stand ,Karimangalam ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை