×

நல்லம்பள்ளி அருகே நீர்தேக்க தொட்டியின் கேட் வால்வில் பழுது

நல்லம்பள்ளி, டிச.27: நல்லம்பள்ளி அருகே கொங்களாபுரம் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் கேட் வால்வில் ஏற்பட்ட பழுதால் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. நல்லம்பள்ளி அருகே கொங்களாபுரம் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, கொங்களாபுரம் பஸ் ஸ்டாப்பில், மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு, ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வெளியேறும் குழாயின் வால்வில் பழுது ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே, குடிநீர் வால்வில் ஏற்பட்டுள்ள பழுதை உடனடியாக சீரமைத்து, குடிநீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nallampalli ,Water tank ,
× RELATED தர்மபுரி மாவட்டத்தில் கொண்டைக்கடலை அறுவடை பணி தீவிரம்