×

கொலை செய்து வீசப்பட்டாரா? போலீசார் விசாரணை உள்ளாட்சி தேர்தல் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

திருச்சி, டிச.27: திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 6 ஒன்றியங்களில் நடைபெறும் இந்த வாக்குப்பதிவை கண்காணிக்க 41 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் கட்டமாக வரும் 30ல் லால்குடி 198, மண்ணச்சநல்லூர் 217, முசிறி 162, புள்ளம்பாடி 147, தா.பேட்டை 132, தொட்டியம் 171, துறையூர் 177, உப்பிலியபுரம் 133 என 8 ஊராட்சி ஒன்றியங்களில் 1,337 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 58 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதையொட்டி மணிகண்டம் ஒன்றியத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான வாக்குச்சீட்டுகள் வாக்காளர் பட்டியல், வாக்கு பெட்டி, பென்சில், மை, அரக்கு, நூல்கண்டு, பேனா போன்ற பல்வேறு பொருட்கள் அனுப்பும் பணி நேற்று நடைபெற்று வருவதை பார்வையிட்டு, வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு இரவுக்குள் அனுப்பி வைத்திட வேண்டும் என்றும், வாக்குச்சாவடிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் உள்ளதா என்பதை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags : Police Inquiry Local Elections First Elections ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ