×

திருமண நிதியுதவி திட்டத்தில் மாற்றம் பழங்குடியினர் 5ம் வகுப்பு படித்திருந்தால் போதும்

திருச்சி, டிச.27: சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் மூலம் 2011-12ம் நிதியாண்டிலிருந்து அனைத்து திருமண நிதியுதவித் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு சில வழிகாட்டி நெறிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய திருமண நிதியுதவித் திட்டங்களில், திட்டம்-1ன் கீழ் பயன்பெற 10ம் வகுப்பு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பழங்குடியினர் 5ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது என திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ள நாளான 29.10.2019 முதல் பெறப்படும் விண்ணப்பங்களை மேற்குறிப்பிட்டுள்ள திருத்தங்களின்படி ஆய்வு செய்யப்படும் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கோடைகாலம் என்பதால் குடிநீரை...