×

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி தர்மபுரி வாலிபர் பலி

திருக்காட்டுப்பள்ளி, டிச. 27: தர்மபுரி புதுக்காடு அழகேசன் மகன் பிரகாஷ் (21). இவர் வீட்டிலிருந்து கிளம்பி மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று திரும்பினார். பின்னர் கல்லணையை சுற்றி பார்க்க நேற்று காலை வந்தார். அப்போது கல்லணை கொள்ளிடம் ஆற்றில் குளித்தார். இதில் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Dharmapuri ,river ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி