கும்பகோணம், டிச. 27: கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல் கும்பகோணம் பெரிய கடைத்தெரு பகுதியில் உள்ள அனுமார் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மூலவருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு உற்சவ மூர்த்தி வீதியுலா புறப்பாடு நடந்தது.