×

இளம்பெண் மர்மச்சாவு

தஞ்சை, டிச. 27: தஞ்சை அருகே பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தஞ்சை அருகே குருங்குளத்தை சேர்ந்தவர் செல்வநிதி (34). இவரது மனைவி சுகன்யா (26). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. செல்வநிதி கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வெளியில் சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்தபோது சுகன்யா தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து வல்லம் போலீசில் சுகன்யாவின் தந்தை கலியபெருமாள் புகார் செய்தார். அதில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சுகன்யாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ வேலுமணி விசாரித்து வருகிறார்.

Tags : Marmachau ,
× RELATED தனியார் விடுதியில் டாக்டர் மர்மச்சாவு திண்டுக்கல்லில் பரபரப்பு