×

இன்று நடக்கிறது டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடிய கார் பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது 2 பேர் படுகாயம்

திருமயம்.டிச.27: திருமயம் அருகே டயர் வெடித்து கார் பள்ளத்தில் கவிழ்ந்தது உருண்டது. இதில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டை கலீப் நகரை சேர்ந்தவர்கள் பாசில் முகமது (30), முகம்மது அப்துல் அசீஸ் (24). இவர்கள் நேற்று திருமயத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி காரைக்குடி திருச்சி பைபாஸ் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை முகமது அப்துல் அசீஸ் ஓட்டியுள்ளார். அப்போது கார் திருமயத்தை அடுத்துள்ள நமணசமுதிரம் பகுதியில் சென்றபோது காரின் முன்பக்க டயர் எதிர்பாராமல் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் பைபாஸ் சாலையில் தாறுமாறாக ஓடியது.

சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு சாலையிலிருந்து தூக்கி வீசப்பட்டது கவிழ்ந்து உருண்டது. இந்த விபத்தில் காரில் இருந்த பாசில் முகமது, முகமது அப்துல் அசீஸ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் நமணசமுத்திரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறி பார்...