×

ஆவுடையார்கோவில் அருகே குண்டும், குழியுமாக மாறிய ஒக்கூர் சாலை தார்சாலை அமைக்க கோரிக்கை

அறந்தாங்கி, டிச.27: ஆவுடையார்கோவில் அருகே ஒக்கூர் சாலை குண்டும், குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே தார் சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இருந்து புண்ணியவயல், ஒக்கூர் வழியாக கரூர், திருவாடாணை, பேயாடிக்கோட்டை, ஏம்பல் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினசரி 30க்கும் மேற்பட்ட நடைகள் பேருந்துகள் சென்று வருகின்றன. மேலும் தினசரி நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தையும், சிவகங்கை மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக இந்த சாலை விளங்குகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சாலை ஒக்கூர் அருகே பல்வேறு இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதுகுறித்து பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் நெடுஞ்சாலைத்துறையினரிடம் புகார் கூறியும் சாலை சீரமைக்கப்படவில்லை. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் ஒக்கூர் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீரமைத்து, புதிதாக தரமான சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pit ,Okur ,dump ,Oudayarikovil ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ