×

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகாரினை தேர்தல் பார்வையாளரின் செல்போனில் தெரிவிக்கலாம்

நாகை, டிச.27: நாகை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமான புகார்களை தேர்தல் பார்வையாளர் செல் எண்ணில் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் பிரவீன் பி நாயர் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் பார்வையாளராக சந்திரசேகர்சகாமுரி நியமிக்கப்பட்டுள்ளார். 11 ஊராட்சி ஒன்றியங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 6385453746 என்ற செல் போன் எண்ணில் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கொள்ளிடம் அருகே கடைவீதியில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது