×

ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி ஊராட்சியில் வேட்பாளர் பானுமதி வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு

வேதாரண்யம், டிச.27: வேதாரண்யம் ஆயக்காரன்புரம் 3ம்சேத்தி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர் பானுமதி வீடு, வீடாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம்-3ம் சேத்தி ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பானுமதி இவர் ஆயக்காரன்;புலம்-3ம் சேத்தி ஊராட்சியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் பானுமதிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். நூற்றுக்கணக்கான ஆண், பெண் தொண்டர்கள் வாக்கு சேகரிப்பின்போது உடன் சென்றனர். பொதுமக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயலாற்றுவேன் என்றும் அரசின் திட்டங்களை அனைத்தும் முழுமையாக கொண்டு வந்து சேர்ப்பேன் என்றும் உறுதிமொழி கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags : Candidate ,Panamati House ,Sethi Panchayat ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்