×

தென்னடாரில் ஒன்றியக்குழு உறுப்பினருக்கு கமலா அன்பழகன் வாக்கு சேகரிப்பு

வேதாரண்யம், டிச.27: தென்னடாரில் ஒன்றியக்குழு உறுப்பினருக்கு வேட்பாளர் கமலா அன்பழகன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். வேதாரண்யம் தாலுக்கா தென்னடாரில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர் கமலாஅன்பழகன் போட்டியிடுகிறார். மாவட்ட கவுன்சிலருக்கு வழக்கறிஞர் சுப்பையன் போட்டியிடுகிறார். வேட்பாளர் கமலா அன்பழகன் பஞ்சநதிக்குளம் மேற்கு, தென்னடார்,பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி, சிறுதலைக்காடு ஆகிய ஊராட்சிகளில் வாக்கு சேகரித்தனர். வேட்பாளர் கமலாவிற்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வேட்பாளர் கமலாஅன்பழகன் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு மற்றும் அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவேன் எனவும் அரசின் நலத்திட்ட உதவிகளை முழுமையாக இந்த தொகுதிக்கு கொண்டு வருவேன் எனவும் வாக்குறுதி அளித்து இரட்டை இலை சின்னத்திற்கு கூட்டணி கட்சி தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

Tags : Kamala Anbalakaran ,Union ,committee member ,South ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...