×

பஞ்சமாதேவி பிரிவு சாலையில் காவல் சோதனை சாவடியை செயல்படுத்த வேண்டும்மக்கள் கோரிக்கை

கரூர், டிச.27: காவல் சோதனைச் சாவடியை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவி பிரிவுசாலையில் காவல்துறை சார்பில் சோதனை சாவடி புதிதாக அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் நின்றுகொண்டு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அவசர தகவல் வந்தால் வாகனங்களை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் இந்த சோதனை சாவடி அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கி வைக்கப்பட்டது. தற்போது சில மாதங்களாக செயல்படாத சோதனைச்சாவடியாகி விட்டது. பலஆயிரம் ரூபாயில் அமைக்கப்பட்ட இந்த சோதனை சாவடியை திறந்து வைத்து காவல் பணியாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : implementation ,police checkpoint ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி