×

குளித்தலை சுவாமி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை 2 நாட்கள் நடக்கிறது

குளித்தலை, டிச. 27: கரூர் மாவட்டம் குளித்தலை ஆண்டார் மெயின் ரோட்டில் உள்ள சுவாமி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி 2 நாட்கள் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று காலை 5 மணி முதல் சிறப்பு நட்சத்திர ஹோமம், காலை 9 மணிக்கு சிறப்பு ஏகாதச ருத்ர மகா அபிஷேகம், மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சியுடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஐயப்பன் திரு வீதிஉலா நடைபெறும். 2ம் நாளான நாளை மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மகா தீபாராதனை அன்னதானம் நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் திருமண தடைகள் உள்ள ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதீகம். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சுவாமி ஐயப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

Tags : Mandala Pooja ,temple ,Kuttalai Swami Iyappan ,
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...