×

அலங்கார விளக்கை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி டாக்டரின் கணவர் பலி

தூத்துக்குடி, டிச. 27:  தூத்துக்குடி தபால்தந்தி காலனியை சேர்ந்தவர் அசோக் கோமஸ்(53). இவர், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி டாக்டர் பத்மாவதி, தூத்துக்குடி மருத்துவக்கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். நேற்று முன்தினம் மாலை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வீட்டை மின்விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகளில் ஒன்று  எரியாமல் இருந்துள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் அசோக் கோமஸ் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார்.  இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அசோக் கோமஸ் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Doctor ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...