×

உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதியில் ஆலை தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநர் அறிவிப்பு

நெல்லை, டிச. 27:   தூத்துக்குடி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1994, பிரிவு 80-ஏ படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(27ம் தேதி) மற்றும் 30ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக அந்தந்த தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் எந்தவித புகார்ளுக்கும் இடம் கொடுக்காமல் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Joint Director ,elections ,plant workers ,
× RELATED உரங்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை