×

கழுகுமலையில் மருத்துவமனை ஊழியரை தாக்கிய மாஜி மின்வாரிய அதிகாரி கைது

கழுகுமலை, டிச. 27:  கழுகுமலை அருகே பழங்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த நடராஜன் (64). இவர், மின்வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மகன் பாலாஜிக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதால், அதற்கு சிகிச்சை எடுக்க கடந்த 20ம் தேதி கழுகுமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாதுகாப்பாக அவரது தாய் மாரியம்மாள்(55) உடனிருந்தார்.அப்போது மாரியம்மாளுக்கு திடீரென உடல்நிலை பாதித்துள்ளது. இதனால் அங்கேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும், கோவில்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாரியம்மாள் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், தனது மனைவி மரணத்துக்கு தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சைதான் காரணம் என்று நடராஜன் நேற்று முன்தினம் காலை கழுகுமலையில் உள்ள மருத்துவமனைக்கு வந்து தகராறு செய்துள்ளார். மேலும், அங்குள்ள செவிலியரை தாக்க முயன்றார். இதனை தடுக்க முயன்ற மருத்துவமனை ஊழியர் கரிசல்குளம் நடுத்தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் ஏகாம்பரமூர்த்தியை(25) நடராஜன் தாக்கியுள்ளார். இதுகுறித்து கழுகுமலை போலீசில் ஏகாம்பரமூர்த்தி புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி விசாரணை நடத்தி வழக்குப்பதிந்து நடராஜனை கைது செய்தார்.

Tags : electricity officer ,hospital employee ,
× RELATED ‘புதிய புரட்சி, வருமான வாய்ப்பு’ என...