×

வெள்ளிச்சந்தையில் காதல் திருமணம் செய்த வாலிபர் மீது தாக்குதல் மாணவியின் தந்தை, தாய் உட்பட 22 பேர் மீது வழக்குபதிவு

நாகர்கோவில், டிச.27:  வெள்ளிச்சந்தையில் காதல் திருமணம் செய்த வாலிபரை தாக்கிய மாணவியின் தந்தை, தாய் உட்பட 22 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். வெள்ளிச்சந்தை அருகே அறப்புரை காலனியை சேர்ந்தவர் கணபதி மகள் சரண்யா. இவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்துள்ளார். கடந்த 23ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. கணபதி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பூதப்பாண்டி அருகே துவரங்காடு, மத்தியாஸ்நகர் பகுதியை சேர்ந்த பியூட்லின்(27) என்ற வாலிபர் சரண்யாவை அழைத்து சென்று மாலை மாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது.போலீஸ் விசாரணைக்காக நேற்று முன்தினம் பியூட்லின் தனது தாயார், உறவினர்களுடன் சரண்யாவை அழைத்துக்கொண்டு வெள்ளிச்சந்தை காவல் நிலையம் வந்தார். இந்ததகவல் அறிந்த சரண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்நிலையம் முன்பு திரண்டிருந்தனர். அப்போது சரண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தன்னை தாக்கிவிட்டு சரண்யாவை வலுக்கட்டாயமாக கடத்தி சென்று விட்டனர் என்று பியூட்லின் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். மேலும் படுகாயம் அடைந்த பியூட்லின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் வெள்ளிச்சந்தை போலீசார் சரண்யாவின் தந்தை கணபதி, தாயார் சுதா உட்பட 22 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : student ,
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...