×

சின்னசேலத்தில் ரயில் தண்டவாளத்தில் பைனான்சியர் சடலம்

சின்னசேலம், டிச. 27:   கள்ளக்குறிச்சியில் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள கே.பி.ஆர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(55). மனைவி, மகன், மகளுடன் வசித்து வந்தார். இவர் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சுற்றுச்சூழல் மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தில் நிர்வாகியாக இருந்து வந்தார். மேலும் இவர் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், சுப்பிரமணியன் நேற்றுமுன்தினம் இரவு சென்னை செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சின்னசேலம் ரயில் நிலையம் சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை சுப்பிரமணியன் குடும்பத்தினர் சென்னை சென்று விட்டாரா என்று தெரிந்து கொள்வதற்கு போன் செய்துள்ளனர். போனை எடுக்கவில்லை. இதனால் குடும்பத்தினர் பதற்றத்துடன் இருந்துள்ளனர்.

 இந்நிலையில் சின்னசேலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அருகில் கிடந்த சட்டையில் இருந்த அடையாள அட்டையை பார்த்தபோது சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி என இருந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் வந்து அவரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த விபத்து குறித்த தகவலின் பேரில், சேலம் கோட்ட ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுப்பிரமணியன் கழிப்பிடம் செல்வதற்கு சென்ற போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது பைனான்ஸ் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Financier ,
× RELATED பைனான்சியரிடம் மிரட்டி ₹50 ஆயிரம் பறிப்பு மேலும் 2 பேர் கைது வேலூரில்