×

ஊட்டியில் ஏ.டி.எம்.ல் பணமில்லாமல் சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டி, டிச. 27:  தொடர் விடுமுறையை முன்னிட்டு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஏ.டி.எம். மையத்தில் பணமில்லாததால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.   பொதுவாக பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை சமயங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். கிறிஸ்துமஸ், பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை வந்துள்ள நிலையில் தற்போது ஏராளமான சற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்துள்ளனர். அதேபோல், இந்த வார இறுதியில் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட வாய்ப்புள்ளது. ஊட்டிக்கு வந்துள்ள பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பணம் எடுக்க ஏ.டி.எம்.களை தேடி அலைகின்றனர். ஒரு சில சமயங்களில் ஏ.டி.எம்.களில் பணம் இல்லாத நிலையில், பொருட்களை வாங்க முடியாமலும், உணவு உட்க்கொள்ள முடியாமலும் தவித்து வருகின்றனர். சில ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் சுவைப்பிங் செய்ய மறுப்பது, பணத்தை கேட்பதால் சுற்றுலா பயணிகள் பாதிக்கின்றனர். எனவே, விடுமுறை முடியும் வரை சுற்றுலா பயணிகள் நலன் கருதி, ஊட்டியில் உள்ள ஏ.டி.எம். ெமஷின்களில் பணம் தாராளமாக கிடைக்கும் வகையில் இருப்பு வைக்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : ATM ,Ooty ,
× RELATED கிருஷ்ணகிரியை அடுத்த...