×

குற்றவாளியை கைது செய்ய கோரி ஆட்சியரிடம் மனு

விழுப்புரம், டிச. 27:     கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்யக்கோரி விழுப்புரம் ஆட்சியர், எஸ்பியிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் மனைவி செல்லம்மான், தனது உறவினர்களுடன் ஆட்சியர், எஸ்பியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் நாராயணனை கடந்த 21ம் தேதி எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கல், தடியால் சரமாரியாக தாக்கினார்கள்.

இதில் பலத்த காயமடைந்த எனது கணவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பின்னர் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அதில் 5 பேரை மட்டும் போலீசார் பிடித்துள்ளனர். அதில் முக்கிய கொலையாளியை போலீசார் இதுவரை பிடிக்கவில்லை. எங்கு பதுங்கியிருக்கிறார் என்பதும், ஊருக்குள் வந்துசெல்வதும் காவல்துறையினருக்கும் தெரியும். கொலையாளி ஊருக்குள் வந்து செல்வதால் மற்ற பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே முக்கியகொலையாளிகளை விரைந்து கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். அவர் கிருஷ்ணாபுரம் கிராம உதவியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : arrest ,
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!