×

விருத்தாசலம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

விருத்தாசலம், டிச. 27: விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, நான்கு பேர் சேர்ந்து ஒருவரை ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து திருச்சி ரயில்வே கோட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேற்று சம்பவ இடத்தில் நேரடி ஆய்வு செய்தார். தொடர்ந்து விருத்தாசலம் ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு சென்று வழக்கு சம்பந்தமான பதிவேடுகள் குறித்தும், தொடர்ந்து விருத்தாசலம் ரயில் நிலையப் பகுதியில் அடிக்கடி நடைபெற்று வரும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து காவல் நிலையத்தில் பணிகள் குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.அப்போது விருத்தாசலம் ரயில்வே இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Tags : Inspection ,Trichy Police Station ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...