×

பந்தலூர் அருகே புகையிைல பொருட்களை கடத்திய 3 பேர் கைது

பந்தலூர், டிச. 27: பந்தலூர் அருகே  தேவாலா பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிைல பொருட்களை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.   பந்தலூர் அருகே தேவாலா போலீசாருக்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்துவதாக ரகசிய தகவல்  கிடைத்தது. இதையடுத்து தேவாலா டி.எஸ்.பி சிவகார்த்திகேயன் உத்தரவு படி இன்ஸ்பெக்டர் திருஞானசம்மந்தம்  தலைமையில் போலீசார் தேவாலாவில் இருந்து அத்திக்குன்னா  செல்லும் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த  வழியாக வந்த வேன் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை சோதனை செய்தபோது, அதில் தடைசெய்யப்பட்ட 3ஆயிரம் புகையிலை பாக்கெட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வேன் டிரைவர் சுப்ரமணியன், ஆட்டோ டிரைவர் மகேஷ் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தியதில், புகையிலை பொருட்களை கூடலூர் நந்தட்டி பகுதியை  சேர்ந்த கண்ணன் (40) அனுப்பியதும், அவற்றை உப்பட்டி பகுதியில் உள்ள ஒரு  கடைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புகையிைல பொருட்கள் மற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, 3பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Bandalur ,
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா