×

செங்கை, காஞ்சி வீரர்களுக்கு அழைப்பு மாநில மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு போட்டி

செங்கல்பட்டு, டிச. 27: மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்க வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகள் தரைப்பந்து, இறகுபந்து போட்டிக்கான அணிகள் தேர்வு 28, 29 மற்றும் 30 ஆகிய 3 தேதிகளில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கலாம். அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு, பயணப்படி ஆகிய அனைத்தும் இலவசமாக செய்து தரப்படும். போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் இன்று (27ம் தேதி) மாலைக்குள் தங்கள் விவரங்களை 97901 27344 என்ற எண்ணிலும், 84385 00256 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், specialathletesrn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் பதிவு செய்து கொள்ளலாம். இதில், தேர்வு செய்யப்படுவோர் ஸ்வீடனில் நடைபெறும், அறிவுசார் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு  போட்டிகளில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chengi ,Kanchi ,State Representatives Sports Competition ,
× RELATED தியாகராஜர் கண்ட தெய்வீக தரிசனம்!