×

மாமல்லபுரம் அருகே பயங்கரம் காதலிக்க மறுத்த இளம்பெண் கொடூர கொலை: கட்டிட தொழிலாளி கைது

திருக்கழுக்குன்றம், டிச. 27: மாமல்லபுரம் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கொடூரகொலை செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் துர்கா ராவ் (21). விஜயநகர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்ற கட்டிட மேஸ்திரியிடம், மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவன கட்டுமான பணியில் தொழிலாளியாக வேலை செய்தார். மேஸ்திரி ஜெயராஜின் மகள் லாவண்யாவும் (17), அதே கட்டுமான பணியில் வேலை பார்த்தார். அப்போது, லாவண்யாவுக்கும் துர்கா ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையறிந்த ஜெயராஜ், துர்கா ராவை வேலையில் இருந்து நீக்கினார். அதன்பிறகு துர்கா ராவ் சென்னை வானகரத்தில் தங்கி, வேறு கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் துர்கா ராவ், லாவண்யாவை சந்தித்து தனது காதலை உறுதிப்படுத்துவதற்காக நேற்று காலை பட்டிபுலம் கிராமத்துக்கு சென்றார். அவரது வீட்டில் குளியலறைக்கு சென்ற லாவண்யாவை மடக்கி தனது காதல் குறித்து கேட்டுள்ளார். அதற்கு லாவண்யா தன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த துர்கா ராவ், மறைத்து வைத்திருந்த கத்தியால், லாவண்யாவை வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில், படுகாயமடைந்த அவர், அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதை பார்த்ததும், துர்கா ராவ் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து, மாமல்லபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, துர்கா ராவை கைது செய்தனர். இதற்கிடையில், படுகாயமடைந்த லாவண்யாவை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார்.

Tags : Torture murder ,Architect ,Mamallapuram ,
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...