கே.வி.குப்பம், டிச.27: லத்தேரி அடுத்த செஞ்சி கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கண் சிகிச்சை நிபுணர் சிவசங்கர் தலைமை தாங்கினார். எம்எல்ஏ லோகநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில், 500க்கும் மேற்பட்டவர்கள் இலவச சிகிச்சை பெற்றனர். இதில் கண், காது, மூக்கு, குழந்தையின்மை உட்பட பலர் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில், வட்டார மருத்துவ அலுவலர் திவ்யா, சத்துணவு திட்ட அலுவலர் மைதிலி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.