×

காவேரிப்பாக்கத்தில் துணிகரம் அம்மன் கோயிலில் 3 சவரன் நகை, கிரீடம் திருட்டு

காவேரிப்பாக்கம், டிச.25: காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் மாகாளியம்மன் கோயில் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்குள்ள அம்மனை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். மேலும், இக்கோயிலில் அமாவாசை நாட்களில் ஊஞ்சல் உற்சவம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கோயில் பூசாரி வழக்கம் போல் பூஜை முடிந்து கோயிலை பூட்டிவிட்டு சென்றார். பின்னர், மீண்டும் மாலை 5 மணியளவில் கோயிலுக்கு வந்தபோது கோயிலின் முன் பக்க பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த தாலி, லட்சுமி பொட்டு உள்ளிட்ட 3 சவரன் தங்க நகைகள் மற்றும் அம்மன் கிரீடம், கோயில் மணி, காமாட்சி விளக்கு, ஒலிப்பெருக்கி உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.

Tags : Kaveripakkam ,
× RELATED அவளூர் தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தம்...