×

பெல் எஸ்சி, எஸ்டி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை, டிச. 25: ராணிப்பேட்டை பெல் நுழைவு வாயில் முன் எஸ்சி, எஸ்டி சங்கத்தின் சார்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  பெல் புதுடெல்லி தலைமை அலுவலகத்தில் 26.12.2019 அன்று தேசிய ஆணையம் ரிசர்வேஷன் பாலிசி சம்பந்தமாக ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பெல் அனைத்து யூனிட்டுகளிலும் இயங்கும் எஸ்சி, எஸ்டி பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும். ஆனால் 4 யூனிட்டுகள் மட்டும் அதாவது திருச்சி, போபால், ஹரித்துவார், ஐதராபாத் ஆகிய நான்கு யூனிட்டுகளுக்கு மட்டும் கார்ப்பரேட் நிர்வாகம் அழைப்பு  விடுத்துள்ளது. இதை கண்டித்து ராணிப்பேட்டை பெல் எஸ்சி, எஸ்டி சங்கத்தின் சார்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெல் நுழைவு வாயில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்சி,எஸ்டி சங்கத்தின் தலைவர் ரவி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரெஜிஸ் ரீகன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் சங்க துணை செயலாளர் குலசேகரன் நன்றி கூறினார்.

Tags : Bell SC ,SD Association ,
× RELATED சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம்...