×

பேரண்டப்பள்ளியில் நேத்ரா கிரண் தீவிர வாக்கு சேகரிப்பு

ஓசூர், டிச.25: சூளகிரி ஊராட்சி ஒன்றியம், பேரண்டப்பள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு பத்தலப்பள்ளியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் நேத்ரா கிரண் ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் பத்தலப்பள்ளி, மாரனப்பள்ளி, அனுமந்தபுரம், தோடதேப்பள்ளி, தம்மநாயகனப்பள்ளி, பேரண்டப்பள்ளி, மாரசந்திரம், திருச்சிப்பள்ளி, கொத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் பத்தலப்பள்ளி நாகராஜ், கிரண், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நஞ்சப்பா, சின்ன நஞ்சப்பா, வெங்கடசாமி, சம்பங்கிராமையா, வெங்கடலச்சுமையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Tags : Netra Kiran Extreme ,
× RELATED தனியார் ஊழியரிடம் ₹3.23 லட்சம் மோசடி