×

தாலுகா அலுவலகத்தில் வெயிலில் காத்திருக்கும் பொதுமக்கள்

சிங்கம்புணரி, டிச.25: சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் உள்ள இ.சேவை மையம் கட்டிடத்தின் முன் நிழற்கூரை இல்லாததால் பொதுமக்கள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்திற்கு சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களை சேர்ந்த கிராமமக்கள் தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து ஆதார் கார்டு, ஜாதி, வருமான, இருப்பிட சான்றிதழ்கள் குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தாலுகாவிலுள்ள இ.சேவை மையத்தை அணுகுகின்றனர். இதனால் காலை முதல் மாலை வரை நிற்கும் பொதுமக்கள் நீண்டநேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் வயதானவர்கள் வெயிலில் நிற்க முடியால் சேவை மையம் கட்டிடத்தின் முன்புள்ள மரத்தடியில் மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே தாலுகா நிர்வாகம் இ.சேவை கட்டிடத்தின் முன்பு தகர செட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து முத்துராமன் கூறும்போது, தாலுகா அலுவலகத்தில் உள்ள இ.சேவை மையத்திற்கு ஆதார் சம்பந்தமாக வந்த போது அடிக்கடி நெட் கிடைக்கவில்லை என்பதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் கட்டிடத்தின் முன்பு தகர செட் இல்லாததால் நீண்டநேரம் வெயிலில் நிற்க வேண்டிய நிலை உள்ளது என்றார்.

Tags : Civilians ,taluk office ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை