×

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 30ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

கரூர், டிச. 25: ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது குறித்து கரூர் கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிபக் கழக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்எல்3 உரிமம் உள்ள ஓட்டல்கள், எப்எல்2, எப்எல்11, (எப்எல்6 தவிர) ஆகியவை தமிழ்நாட்டில் இரு கட்டங்களாக நடைபெறும் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2019ஐ முன்னிட்டு இன்று (25ம்தேதி) மாலை 5மணி முதல் 27ம்தேதி மாலை 5மணி வரையிலும்,

28ம்தேதி மாலை 5மணி முதல் 30ம்தேதி மாலை 5மணி வரையிலும், இதே போல், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜனவரி 2ம்தேதி ஆகிய நாட்களில் மதுபானம் மற்றும் பீர்வகைகள் விற்பனை முடக்கம் செய்ய இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது. மேலும், இந்த நாட்களில் 5 கிமீ சுற்றளவில் உள்ள எல்லைக்கு உட்பட்ட அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்எல்3 உரிமம் உள்ள ஹோட்டல்கள் போன்றவை முடக்கம் செய்யப்படுகிறது. விதிமுறைகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Holidays ,shops ,Tasmak ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி