×

மேட்டுப்பாளையம் அருகே பஸ் மீது பைக் மோதி ஒருவர் சாவு

மேட்டுப்பாளையம், டிச.25: கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று குட்டையூர் மேடு என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த பைக் ஒன்று பஸ் முன் சக்கரத்தில் மோதி விபத்துகுள்ளானது. இதில் பைக்கில் வந்த ஆன்ட்ரூஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து நேருக்கு நேர் வந்ததால் எதிர் பாராதவிதமாக இரண்டு பஸ்களும் மோதி விபத்துகுள்ளனது. இதில் பஸ் ஓட்டுனர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்கு  மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர். காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Mettupalayam ,
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது