கோவை, டிச.25: கோவை சுந்தராபுரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் தீப பாடல் ஆராதனை நடந்தது. ஆயர் எஸ். வசந்தகுமார் ஆரம்ப ஜெபம் செய்தார். ஆயர் செல்லராஜன் தேவ செய்தி அளித்தார். டி.எஸ். ராக்லன்ட் பயிற்சி அளித்த சிறப்பு பாடல்களை பாடகர் குழுவினர் பாடினர். ஆயர் அமலா ஞானதுரை இறுதி ஜெபம் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவை திருமண்டல உறுப்பினர்கள் டி.எஸ். டேனியல், விஜிலா ஜேம்ஸ், ேபாதக சேகர கமிட்டி செயலாளர் ஜெபசுதா டேனியல், பொருளாளர் டாக்டர் ராஜீவ் சுரேஷ்குமார் மற்றும் உறுப்பினர்கள், சபை மக்கள் செய்திருந்தனர்.