×

பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் வாய்க்கால் தடுப்பு சுவர் உடைந்து கிடப்பதால் விபத்து அபாயம்

பாபநாசம், டிச. 25: பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் வாய்க்கால் தடுப்பு சுவர் உடைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, அக்ரி அலுவலகம், ஈ.பி ஆபிஸ், ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளன. இந்த சாலையில் பாபநாசத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் குழந்தை வரம் அருளும் திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில் உள்ளது. இந்த சாலையில் பெருமாங்குடி, மதகரம், மட்டையாந்திடல், வளத்தாமங்கலம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கும்பகோணம்- தஞ்சாவூர் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் தஞ்சாவூர், திட்டை செல்ல விரும்புபவர்கள் பாபநாசம் வந்து இந்த சாலை வழியாக செல்வர். இந்த சாலையில் உள்ள வாய்க்கால் தடுப்புச்சுவர் உடைந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். வாய்க்கால் பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் வாய்க்கால் தடுப்புச்சுவரை கட்டி தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


Tags : accident ,collapse ,road ,Papanasam-Saliyamangalam ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...