×

அதிகாரிகள் விசாரனை போலி மருத்துவர் கண்டுபிடிப்பு

பெ.நா.பாளையம், டிச.25:  கோவை சின்னதடாகம் அருகே உள்ள வீரபாண்டி புதூரில் திருச்சி மாவட்டம் திருவனம் பூரை சேர்ந்த சிற்றம்பலம் மனைவி முத்தம்மாள்(52). வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வருகிறார். அதில் ஒரு பகுதியில் கிளினிக் நடத்தி பொதுமக்களிடம் தான் ஒரு டாக்டர் என்று கூறி மருத்துவம் பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சித்ரா(32). என்பவர் கர்ப்பமான நிலையில் சிகிச்சைக்காக முத்தம்மாளிடம் வந்துள்ளார். அவர் கொடுத்த மருந்துகளை சாப்பிட்டதும் அதிகளவு ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. பின் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்குள்ள மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் முத்தம்மாள் கொடுத்த மருந்துகள் தவறானது என்று தெரிய வந்தது. இதை தொடர்ந்து வீரபாண்டி புதூர் வந்த மருத்துவ அதிகாரிகள் நடத்திய விசாரனையில் முத்தம்மாள் டாக்டருக்கு படிக்கவில்லை என்றும் போலியாக டாக்டர் என்று கூறி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அங்கு வைத்திருந்த மருந்து மாத்திரை களும் பறிமுதல் செய்யப்பட்டது. வீரபாண்டி புதூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி லோகநாயகி கொடுத்த புகாரின் பேரில் தடாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Tags : doctor ,
× RELATED பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்