×

அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் என் கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சிக்காக பாடுபடுவேன்

தாராபுரம், டிச.25: உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் நான் பிறந்த கிராமத்தை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என தாராபுரத்தில் நேற்று நடந்த பிரசாரத்தில் பேசினார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமமுக  வேட்பாளர்கள் கிருஷ்ணவேணி, பிரேமா, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வெண்ணிலா ஆகியோருக்கு ஆதரவாக நடிகர் விக்னேஷ் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தனது சொந்த கிராமமான நாட்டார்மங்கலத்திற்கு வந்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்,`ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் நான் பிறந்த நாட்டார்மங்கலம் கிராமத்தை தத்தெடுத்து அங்கு வசிக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், தொழில் வளர்ச்சி அடையவும், அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் முயற்சி எடுப்பேன்’ என்றார்.

Tags : UMF ,village ,
× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி