நெல்லை, டிச. 25: சேஷசாயி காகித ஆலையின் நெல்லை யூனிட் சார்பில் முக்கூடல் போலீசாரிடம் 6 சிசிடிவி காமிராக்கள் வழங்கப்பட்டன. முக்கூடல் கடைவீதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், சிசிடிவி காமிராக்கள் பொருத்தும் பணியை முக்கூடல் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் இந்நடவடிக்கைகளை மேம்படுத்தும் விதமாக சமுதாய பொறுப்புணர்வு திட்டங்களின் கீழ் சேஷசாயி காகித ஆலையின் நெல்லை யூனிட் சார்பில் 6 சிசிடிவி காமிராக்கள் மற்றும் அதைச் சார்ந்த இதர உபகரணங்களை ஆலை துணை தலைவர் சுந்தரேசன் வழங்கினார். முக்கூடல் எஸ்ஐக்கள் செல்வராஜ், சிவதாணு, கணேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆலையின் மனித வளத்துறை தலைவர் ராமமூர்த்தி, அலுவலர்கள் சின்னப்பன், முத்துக்குமார், ஜெபராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.