×

ஒரே நேரத்தில் இறுதிச்சடங்கு வாக்காளர்களுக்கு வழங்க பைக்கில் காரைக்கால் மது பாட்டில்கள் கடத்தல்

வேதாரண்யம்,டிச.25: வாக்காளர்களுக்கு வழங்க பைக்கில் காரைக்கால் மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் போலீசுக்கு பயந்து ஆற்றில் குதித்து தப்பி ஓடினர்.வேதாரண்யம் தாலுகா, அருந்தவம்புலம் அருகே வேதாரண்யம் வட்ட வழங்கல் அதிகாரி வடிவழகன் தலைமையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் தலைஞாயிறு பழனிவேல்,வாய்மேடு வினோத்,வேட்டைக்காரனிருப்பு அசோக் உள்ளிட்ட பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியே வந்த பைக்கை நிறுத்திய போது மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு அதில் வந்த இரண்டு பேர் ஆற்றில் குதித்து தப்பியோடிவிட்டனர். பைக்கை சோதனை செய்தபோது 394 குவாட்டார் காரைக்கால் மதுபானபாட்டில்கள் இருந்ததை கைப்பற்றி, பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

அவற்றை தலைஞாயிறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டா; சுபாஷ்சந்திரபோஸ் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய இரண்டு பேரையும் தேடிவருகிறார். மேலும் இந்த மதுபாட்டில்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு வரப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதேபோல் வேதாரண்யத்தை அடுத்த ஆறுமுககட்டளை அருகே மெயின் ரோட்டில் வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் காரைக்கால் மதுப்பாட்டில்கள் 192 இருந்ததையும், பிளாஸ்டிக் பையில் இருந்த எரி சாராயம் 55 லிட்டரையும் வாகனத்துடன் பறிமுதல் செய்தனர். பைக்கில் வந்த அதிராம்பட்டினம் திராவிடமணி (36),வேதாரண்யம் காந்திநகர் ராஜகிளி (48) ஆகியோரை கைது செய்தனர்.

Tags : voters ,funerals ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...