×

இஸ்லாமிய தோழமை இயக்கம் வலியுறுத்தல் இயற்கை விவசாயம் செய்ய இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

திருத்துறைப்பூண்டி, டிச.25: திருத்துறைப்பூண்டி அருகே வேளூரில் ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி சார்பில் தேசிய விவசாயிகள் தின விழாவை முன்னிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு தேவையான இடுபொருள் தயாரிப்பு மற்றும் செயல்விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்யும்போது மண்வளம் பாதுகாக்கப்படும், பல்லுயிர் தன்மை பாதுகாக்கப்படும். விளைச்சல் அதிகமாக இருக்கும். விதை நெல்லை விதை நேர்த்தி செய்வதற்கு உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், மற்றும் பாஸ்போ பாக்டீரியம், பயிரின் வளர்ச்சிக்காக பஞ்சகாவ்யம், மீன் அமிலம், மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பெருக்க ஜீவாமிர்தம், பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மூலிகைகளால் ஆன பூச்சி விரட்டி போன்றவை தயாரித்து பயன்படுத்தலாம் என்பதை செயல் விளக்கம் மூலம் மாணவர்கள் விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்...