×

கயத்தாறு அருகே கார் விபத்தில் பெண் பலி

கயத்தாறு டிச.24:  மதுரை அய்யனார்புரம் முத்துபட்டியைச் சேர்ந்த குமரன் மகன் சுரேஷ்குமார் (47). இவர் தனது மனைவி சிந்து (40), சிந்துவின் சகோதரியும், கோவையை சேர்ந்த  கண்ணன் நாயரின் மகளுமான சசிரேக நாயர் (53) ஆகியோருடன் மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அதே காரில் மதுரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது கயத்தாறில் இருந்து கழுகுமலை செல்லும் சாலை விலக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத்துவங்கிய இவர்களது கார் சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் சசிரேகா சுயநினைவை இழந்தார். சிந்துவின் தலையிலும், சுரேஷ்குமாரின் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், வழியிலேயே சசிரேகா நாயர் பரிதாபமாக இறந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : car accident ,Kayattaru ,
× RELATED கார் விபத்தில் வாலிபர் படுகாயம்