×

கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

கோவில்பட்டி, டிச.24:  கோவில்பட்டி எம்.எம். வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் கன்னையா, ஜோதிமாரியப்பன், கலாநாதன், பள்ளி முதல்வர் முத்துலட்சுமி, பள்ளி துணை முதல்வர் சுதன் முன்னிலை வகித்தனர்.  தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான பள்ளியில் கேஜி முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முகத்தில் சித்திரம் வரைதல், காய்கறிகளை வண்ண வடிவங்களில் செதுக்குதல், மெமரி டெஸ்ட், திருக்குறள் ஒப்பிவித்தல், நெருப்பில்லாமல் சமைத்தல், மாறுவேடப்போட்டி, இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  விழாவில்  ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதிர்ஷ்ட பரிசாக ரூ.ஆயிரம் ஒவ்வொரு மாணவருக்கும் குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களில் சவுத் சைடு ஸ்கூல் மாணவி வர்ஷினி ரூ.25 ஆயிரம் பரிசு தொகை பெற்றார். நிகழ்ச்சிகளை சின்னதம்பி, பெரியதம்பி தொகுத்து வழங்கினார். இதே போல் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags : Kovilpatti MM Vidyashram School Students ,
× RELATED வேலாயுதபுரத்தில் முப்பெரும்விழா