×

பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

அருப்புக்கோட்டை, டிச. 24: அருப்புக்கோட்டை சந்திரா நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக பள்ளி செயலாளர் சரவணன் மற்றும் சங்கீதா சரவணன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் பாடல், நடனம் மூலம் யேசு கிறிஸ்துவின் பிறப்பை தத்துரூபமாக நடித்து காட்டினர். பள்ளிச் செயலர் பேசுகையில், ‘யேசு கிறிஸ்து மனிதர்களின் பாவங்களை போக்க மண்ணில் அவதரித்த திருநாளாம் கிறிஸ்துமஸ் திருநாளை உலகமே கொண்டாடி வருகிறது. மத நல்லிணக்கம், சமயச் சார்பின்மை வலுப்படுத்த இந்த பள்ளியில் அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது’ என்றார். மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.  கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாணவர்கள் நடனமாடினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ராஜசேகரன் செய்திருந்தார். 

Tags : school ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி