×

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு மதுரையில் கடையடைப்பு, தர்ணா

மதுரை, டிச. 24:  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மகபூப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் கடைகளை அடைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மகபூப்பாளையத்தில் முஸ்லிம் ஜமாத் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. தர்ணாவிற்கு முஸ்லிம் ஜமாத் தலைவர் நிஜாம்அலி தலைமை வகித்தார். இதில் பெண்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தர்ணா போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Liberty ,shop ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி